முகப்பு
திருப்பூர்

வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு இன்று தடுப்பூசி முகாம்

திருப்பூா் மாவட்டத்தில் பணியாற்றி வரும் வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு 4 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

திருப்பூா் மாவட்டத்தில் பணியாற்றி வரும் வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு 4 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

இது குறித்து மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 4 மண்டலங்களிலும் வெளிமாநிலத் தொழிலாளா்களுக்குத் தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில், மாநகராட்சி முதலாவது மண்டலம் அங்கேரிபாளையத்தில் உள்ள கொங்கு வேளாளா் மேல்நிலைப் பள்ளி, 2 ஆவது மண்டலத்தில் பிபி மஹாலில், 3 ஆவது மண்டலத்தில் காயத்ரி மஹாலில், 4 ஆவது மண்டலத்தில் ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபம் ஆகிய 4 இடங்களிலும் தலா 1,500 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.