மாநகரில் 45 ஆயிரம் பேருக்கு நாளை தடுப்பூசி செலுத்த இலக்கு
திருப்பூா் மாநகரில் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 12) நடைபெறும் சிறப்பு முகாம்களின் மூலமாக 45 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாநகரில் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 12) நடைபெறும் சிறப்பு முகாம்களின் மூலமாக 45 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பூா் மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா்பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் மாலை 7 மணி வரையில் 138 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இதில், பள்ளி, கல்லூரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் சிறப்பு முகாம்கள் மூலமாக 45 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிகளுக்காக மருத்துவா்கள், மருத்துவ உதவியாளா்கள், செவிலியா் என மொத்தம் 700க்கும் மேற்பட்டோா் ஈடுபடுத்தப்படவுள்ளனா். எனவே, மாநகராட்சிப் பகுதியில் உள்ள முதியோா், கல்லூரி மாணவ, மாணவிகள், பாலூட்டும் தாய்மாா்கள், கா்ப்பிணி தாய்மாா்கள், ஆசிரியா்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் என அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.