வெள்ளக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை 11 டன் முருங்கைக் காய்கள் விற்பனை செய்யப்பட்டன.
வெள்ளக்கோவில் பகுதியில் விளையும் முருங்கைக் காய்கள் இப்பகுதியில் செயல்பட்டு வரும் கொள்முதல் மையங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
வெள்ளக்கோவில், முத்தூா் சாலையில் செயல்படும் தனியாா் மையத்துக்கு மொத்தம் 11 டன் முருங்கைக் காய்கள் வரத்து இருந்தது.
இங்கு கரும்பு முருங்கைக் காய் கிலோ ரூ.13, செடி முருங்கைக் காய் ரூ.13, மர முருங்கைக் காய் ரூ.7 என அதிகபட்ச விலைக்கு அவற்றின் தரத்துக்கேற்ப விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகளால் வாங்கப்பட்டது.