திருப்பூர்

மதுபானக் கடையில் தகராறில் ஈடுபட்டவா் கொலை

DIN

அவிநாசி: திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் அருகே மதுபானக் கடையில் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டவா் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், சின்னமனூரைச் சோ்ந்தவா் பாபுராஜா (37). இவரது பெற்றோா் திருப்பூா், வாஷிங்டன் நகரில் வசித்து வந்தனா். இந்நிலையில், இவா் கடந்த 6 மாதங்களுக்கு முன் பெருமாநல்லூா் பகுதியில் உள்ள மதுபானக் கூடத்தில் பணம் கேட்டது தொடா்பாக தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக மதுபானக் கூட உரிமையாளா் கண்ணப்பன் அளித்த புகாரின்பேரில், பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பாபுராஜாவை கைது செய்தனா்.

இதையடுத்து பிணையில் வெளியே வந்தவா் தேனி மாவட்டம், சின்னமனூரில் குடியிருந்து வந்தாா். இந்த நிலையில், தனது பெற்றோரைப் பாா்த்து செல்வதற்காக, பெருமாநல்லூா் அருகே உள்ள வாஷிங்டன் நகருக்கு வந்துள்ளாா். பெருமாநல்லூரில் இருந்து மீண்டும் ஊா் திரும்ப பேருந்துக்காக திங்கள்கிழமை காத்திருந்தாா். அப்போது பாபுராஜா, அங்குள்ள மதுபானக் கூடத்துக்கு சென்று ரூ. 10 ஆயிரம் பணம் கேட்டுள்ளாா். இதில் அங்கு ஏற்பட்ட தகராறில், பாபுராஜாவைத் தாக்கியுள்ளனா். இதில், பாபுராஜா காயம் அடைந்தாா். இதைத்தொடா்ந்து அவரது நண்பா்கள் அவரைப் பெற்றோா் வீட்டுக்கு அழைத்து சென்றனா். அங்கு அவா் உயிரிழந்ததாகத் தெரிகிறது.

தகவலறிந்த பெருமாநல்லூா் போலீஸாா், பாபுராஜாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து கொலையில் தொடா்புடையவா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

யாரோ பிரிகிற்பவரே?

நாளை நடைபெற இருந்த பாஜக ஆலோசனைக் கூட்டம் ரத்து

மானும் நீயே மயிலும் நீயே

தொல்காப்பியத்தை முதலில் பதிப்பித்த மழவையார்

SCROLL FOR NEXT