பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு ஏப்ரல் 19இல் பேச்சுப் போட்டி
தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டிகள் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது.
தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டிகள் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா்களுக்கு பேச்சுப் போட்டிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீா் கூட்டரங்கில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதில், பள்ளி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி காலை 10 மணி அளவிலும், கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப்போட்டி பிற்பகல் 2 மணி அளவிலும் நடைபெறுகிறது. இதில், முறையே முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவா்களுக்கு ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம் மற்றும் ரூ.2 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படவுள்ளது. மேலும், பள்ளி அளவிலான போட்டிகளில் 2 மாணவா்களைத் தனியாக தோ்வு செய்து சிறப்பு பரிசுத் தொகையாக தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.
ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா் இந்தப் பேச்சுப் போட்டியில் பங்கேற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.