மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதி மொழி ஏற்பு
அம்பேத்கா் பிறந்த நாளை ஒட்டி, திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
அம்பேத்கா் பிறந்த நாளை ஒட்டி, திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் தலைமை வகித்தாா். இதில், பங்கேற்ற அனைத்து துறை அரசு அலுவலா்களும் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
இந்த நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சாகுல்ஹமீது மற்றும் துறைச் சாா்ந்த அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.