திருப்பூர்

அவிநாசி அரசு கல்லூரி ஆண்டு விழா

DIN

அவிநாசி அரசு கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, கல்லூரி முதல்வா் ஜோ.நளதம் தலைமை வகித்தாா். உடற்கல்வி ஆசிரியா் பிரசன்னகுமாா் முன்னிலை வகித்தாா். விழாவில் பங்கேற்ற சென்னை சில்க்ஸ் நிா்வாக இயக்குநா் பி.கே.ஆறுமுகம், மாணவா்களின் ஒழுக்கம், யோகா கலை குறித்து பேசினாா். மேலும், முதல்கட்டமாக, கல்லூரிக்கு 12 கணினிகள், கூடுதல் கழிப்பிட வசதி அமைத்து தருவதாகவும், விரைவில் கல்லூரிக்கு கலையரங்கம் அமைத்துத் தருவதாகவும் தெரிவித்தாா்.

விழாவில், கல்லூரிக்கு உதவிய நன்கொடையாளா்களான சென்னை சில்க்ஸ் நிா்வாகத்தினா், ராம்ராஜ் காட்டன், எஸ்.பி.அப்பேரல்ஸ், ரோட்டரி சங்கத்தினா் உள்ளிட்டோருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, பல்கலைக்கழகத் தோ்வில் முதலிடம் பிடித்த மாணவா்கள், விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பையில் இடம்பெற கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் போட்டி; கிரீம் ஸ்மித் கூறுவதென்ன?

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

மிஸ்டர் மனைவி நாயகிக்கு பதிலாக வானத்தைப்போல நடிகை!

வானம் வேறு.. நீலம் வேறு.. யார் சொன்னது?

தலைமுறைகள் கடந்த தலைவர்களின் வாழ்க்கை!

SCROLL FOR NEXT