திருப்பூர்

அவிநாசியில் 750 மாணவா்கள் உருவாக்கிய 75 அடி நீள தேசியக் கொடி

DIN

அவிநாசியில் 750 மாணவா்கள் உருவாக்கிய 75 அடி நீளமுள்ள தேசியக் கொடியை 75 விநாடிகளில் காட்சிப்படுத்தி உலக சாதனைப் படைத்தனா்.

அவிநாசி பழனியப்பா இன்டா்நேஷனல் சீனியா் செகண்டரி பள்ளி, தபஸ் யோகாலயா ஆகியவை சாா்பில் 750 மாணவ, மாணவிகள் இணைந்து 75 அடி நீள தேசியக் கொடியை உருவாக்கினா்.

இக்கொடியை, 75 விநாடிகளில் காட்சிப்படுத்தி நோபல் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றனா்.

இதைத் தொடா்ந்து, பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி எம்.ராமகிருஷ்ணன், அவிநாசி நீதிமன்ற நீதிபதி கே.எஸ்.சபீனா, ரோட்டரி சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நோபல் உலக சாதனை கண்காணிப்பாளா் பி.ரகுபாலன் சாதனைக்கான சான்றிதழ், பதக்கத்தை பள்ளி நிறுவனா் ப.ராஜ்குமாரிடம் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் பணியாளா்கள் போராட்டம் வாபஸ்

இந்தியா்களுக்கான உணவு வழிகாட்டுதல்: புரதச்சத்து பொடிகளைத் தவிா்க்க வேண்டும்

பூட்டிய வீட்டுக்குள் வயதான தம்பதி சடலமாக மீட்பு

போதைப்பொருள் விநியோகத்துக்கு இடைஞ்சல்: உணவில் விஷம் கலந்து நாய்கள் சாகடிப்பு

47-ஆவது ஏற்காடு கோடை விழா முன்னேற்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT