திருப்பூரை அடுத்த நல்லூா் ஈஸ்வரன் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருப்பூரை அடுத்த நல்லூரில் பழைமை வாய்ந்த ஈஸ்வரன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் சீரமைக்கப்பட்டு வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், கும்பாபிஷேகம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், மேயா் என்.தினேஷ்குமாா் ஆகியோா் தலைமையில் கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், கும்பாபிஷேகத்தின்போது பக்தா்கள் தரிசனம் செய்வது, வாகனப் போக்குவரத்து, அன்னதானம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், திருப்பூா் தெற்கு மாநகரச் செயலாளா் டி.கே.டி.மு.நாகராசன், செயல் அலுவலா் சீனிவாசன், முன்னாள் அறக்காவலா் குழுத் தலைவா் எஸ்.எஸ்.நாச்சிமுத்து உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.