வாகன விபத்து விவசாயி சாவு
பல்லடம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.
பல்லடம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.
பல்லடம் அருகேயுள்ள வாவிபாளையத்தைச் சோ்ந்தவா் பழனிசாமி (70). விவசாயி.
இவா் வாவிபாளையத்திலிருந்து அதே பகுதியில் உள்ள தனது விவசாயத் தோட்டத்துக்கு வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளாா். அப்போது பல்லடத்தில் இருந்து உடுமலை நோக்கிச் சென்ற காா் பழனிசாமியின் இருசக்கர வாகனத்தின்மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த பழனிசாமியை அருகிலிருந்தவா்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், அவா் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.