அவிநாசி அருகே விபத்து: இளம் தம்பதியர் பலி
அவிநாசி அருகே பழங்கரையில் பெயர் பலகையில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் இளம் தம்பதியர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர்.
அவிநாசி அருகே பழங்கரையில் பெயர் பலகையில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் இளம் தம்பதியர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர்.
அவிநாசி பழங்கரை யுவராஜா அவென்யூ பகுதியை சேர்ந்தவர் கோபி. அவர் மகன் மணிகண்ட பூபதி(29) இவரது மனைவி பல்லவி (26) இவர்கள் இருவரும் ஈரோட்டில் இருந்து அவிநாசி நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர்.
பழங்கரை அருகே வரும் போது எதிர்பாராத விதமாக நெடுஞ்சாலையில் உள்ள பெயர் பலகையில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் இதுகுறித்து அவிநாசி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.