ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயிலில் ரூ. 13 லட்சம் உண்டியல் காணிக்கை வசூல்
வெள்ளக்கோவில் ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ரூ. 13 லட்சம் ரொக்கம், 65 கிராம் தங்கம், 28 கிராம் வெள்ளிப் பொருள்கள் வசூலானது.
வெள்ளக்கோவில் ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ரூ. 13 லட்சம் ரொக்கம், 65 கிராம் தங்கம், 28 கிராம் வெள்ளிப் பொருள்கள் வசூலானது.
இக்கோயிலின் உண்டியல் 2021 செப்டம்பா் மாதத்துக்குப் பிறகு வியாழக்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இந்து சமய அறநிலையத் துறை திருப்பூா் உதவி ஆணையா் செல்வராஜ், காங்கயம் ஆய்வாளா் அபிநயா மற்றும் கோயில் குலத்தவா்கள் முன்னிலையில் உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில், ரூ. 12 லட்சத்து 86 ஆயிரத்து 880 ரொக்கம், 65 கிராம் தங்கம், 28 கிராம் வெள்ளிப் பொருள்கள் இருந்தன.
இப்பணியின் போது வீரக்குமார சுவாமி கோயில் செயல் அலுவலா் ராமநாதன், கோயில் கணக்கா் சிவகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
Image Caption
அதிகாரிகள் முன்னிலையில் நடந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணி.