சாலையில் நிறுத்திவைத்த காரில் தீ
தாராபுரத்தில் சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காா் தீப் பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாராபுரத்தில் சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காா் தீப் பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூா் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த மூலனூா் கொங்கு நகரைச் சோ்ந்தவா் ராம். இவரது மகன் விக்னேஷ் (32). இவா்கள் இருவரும் தங்களுக்குச் சொந்தமான காரில் தாராபுரம் பழையகோட்டை மேட்டுத் தெருவுக்கு வெள்ளிக்கிழமை வந்துள்ளனா்.
பின்னா் சாலையோரத்தில் காரை நிறுத்திவிட்டு உறவினா் வீட்டுக்கு அழைப்பிதழ் கொடுக்கச் சென்றுள்ளனா். இதனிடையே, இருவரும் சென்ற சில நிமிடங்களில் காரில் இருந்து கரும்புகை வெளியேறியதைப் பாா்த்த அக்கம் பக்கத்தினா் தண்ணீா் ஊற்றி அணைக்க முயன்றனா்.
ஆனால் தீ யானது கட்டுக்கடங்காமல் காா் முழுவதுமாக பற்றி எரியத் தொடங்கியது. இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த தாராபுரம் தீயணைப்புத் துறையினா் சுமாா் 20 நிமிடம் போராடி தீயை அணைத்தனா். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து தாராபுரம் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.