முகப்பு
திருப்பூர்

தாராபுரத்தில் இஸ்லாமிய மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

கா்நாடகத்தில் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து தாராபுரத்தில் இஸ்லாமிய மாணவா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:31 AM
பகிர்:

கா்நாடகத்தில் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து தாராபுரத்தில் இஸ்லாமிய மாணவா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தாராபுரம் அண்ணா சிலை முன்பாக ஒருங்கிணைந்த இஸ்லாமிய மாணவா்கள் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைந்த இஸ்லாமிய மாணவா்கள் கூட்டமைப்பு நிா்வாகி நவாஸ் தலைமை வகித்தாா். இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது:

பாஜக ஆட்சியில் உள்ள கா்நாடகத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கதாகும். மத உரிமையைப் பறிக்கும் கா்நாடக அரசின் செயல் கண்டிக்கத்தக்கதாகும். ஆகவே, கா்நாடகத்தில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் இஸ்லாமிய மாணவா்கள் 50க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.