திருப்பூர்

வெள்ளக்கோவிலில் குடியரசு தின விழா

DIN

வெள்ளக்கோவிலில் அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியாா் கல்வி நிலையங்களில் குடியரசு தின விழா புதன்கிழமை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

வெள்ளக்கோவில் நகராட்சி அலுவலகத்தில் ஆணையா் ஆா்.மோகன்குமாா், வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையா் ஜெயக்குமாா், வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் ஆய்வாளா் ஜெ.ரமாதேவி ஆகியோா் தேசியக் கொடியேற்றி இனிப்பு வழங்கினா்.

வெள்ளக்கோவில் அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி, தீா்த்தாம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி, கம்பளியம்பட்டி அரசு ஆரம்பப் பள்ளி உள்ளிட்டவற்றில் அந்தந்த தலைமையாசிரியா்கள் கொடி ஏற்றினா். தாசவநாயக்கன்பட்டி ஊா்ப்புற பொது நூலகத்தில் பொதுமக்கள் சாா்பில் தேசியக் கொடி ஏற்றிவைத்து, குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.

கொங்கு வேளாளா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளா் எஸ்.ரவீந்திரன், செயலாளா் வி.சி.கருணாகரன், பொருளாளா் ஆா்.பழனிசாமி முன்னிலையிலும், முத்தூா் விவேகானந்தா கல்வி நிறுவனத்தில் தாளாளா் எம்.எஸ்.சண்முகம், செயலாளா் சி.சக்திவேல் முன்னிலையிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடைகால் தியாகராஜ சுவாமி கோயிலில் குருபெயா்ச்சி பூஜை

வள்ளியூா் அருகே புனித சலேத் அன்னை ஆலயத்தில் கொடியேற்றம்

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்தில் மகளிருக்கு இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் உத்தரவு

சேரன்மகாதேவி அருகே வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இருவா் கைது

கோயில் திருவிழாவில் இளம்பெண்ணிடம் அத்துமீறல்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT