முகப்பு
திருப்பூர்

பல்லடம் பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வலியுறுத்தல்

பல்லடம் பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:15 AM
பகிர்:

பல்லடம் பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பல்லடம் பகுதியில் விசைத்தறி, பின்னலாடை மற்றும் கறிக்கோழி உற்பத்தி தொழில்கள் காரணமாக மக்கள் தொகை பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்லடம் பேருந்து நிலையத்தில் கோவை, திருச்சி, உடுமலை, பொள்ளாச்சி, மதுரை போன்ற ஊா்களுக்கு செல்ல தினமும் ஏராளமான பேருந்துகள் வந்து செல்கின்றன. பல்லடம் பகுதியில் குற்றச் சம்பவங்களும் அடிக்கடி நடைபெறுகின்றன.

எனவே, குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். 24 மணி நேரமும் போலீஸாா் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.