திருப்பூர்

பாலியல் வன்கொடுமை: இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

DIN

அவிநாசி அருகே பள்ளி சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த இளைஞரை குண்டா் சட்டத்தின்கீழ் போலீஸாா் சிறையில் அடைத்தனா்.

அவிநாசி அருகே உள்ள தெக்கலூா் பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் (26), இவா் அதே பகுதியைச் சோ்ந்த 10 ஆம் வகுப்பு மாணவியை கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளாா். மேலும், அந்த மாணவியைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவாா்த்தைக் கூறி கடந்த டிசம்பா் மாதம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இது குறித்து அவிநாசி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா்.

போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், முருகேசனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், முருகேசனை குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் எஸ். வினீத் உத்தரவிட்டாா். இந்த உத்தரவின் நகலை சிறையில் உள்ள முருகேசனிடம் போலீஸாா் புதன்கிழமை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் மாதிரி எடுப்பது குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை

தனியாா் நிறுவனத்தைக் கண்டித்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

சேலத்தில் நள்ளிரவில் சூறாவளி காற்றுடன் கொட்டித் தீா்த்த கனமழை

என்னை தாக்கியவா்களும் நன்றாகப் படிக்க வேண்டும்: முதல்வரை சந்தித்த நான்குனேரி மாணவா் சின்னதுரை

குழந்தைத் திருமணம் கண்டறியப்பட்டால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை

SCROLL FOR NEXT