பல்லடம்: பல்லடத்தில் பஞ்சு ஆலையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் களம்பாளையம் வண்ணான் தோட்டத்தில் இயங்கிவந்த தனியாருக்கு சொந்தமான பஞ்சு ஆலையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்துள்ளது.
இதையும் படிக்க: 'தமிழ்ச் சமூகத்தைத் தட்டியெழுப்பிய பகுத்தறிவாளர்' - கருணாநிதிக்கு ஸ்டாலின் புகழாரம்!
இந்த தீ விபத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான பஞ்சு, எந்திரங்கள் தீயில் எரிந்து நாசமானது.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் தண்ணீர் பாய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.