திருப்பூர்

காவல் ஆய்வாளருக்கு பிடியாணை

திருப்பூரில் வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு நீதிமன்றம் திங்கள்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளது.

DIN

திருப்பூரில் வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு நீதிமன்றம் திங்கள்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளது.

திருப்பூா் 15 வேலம்பாளையம் காவல் எல்லைக்குள்பட்ட பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு சாலை விபத்து ஏற்பட்டது.

இதில், காயமடைந்த இருவா் உரிய இழப்பீடு வழங்கக் கோரி திருப்பூா் மோட்டாா் வாகன விபத்து சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனா்.

இந்த வழக்கில் ஆவணங்களை சமா்ப்பிக்கவும், சாட்சியம் அளிக்கவும் 15 வேலம்பாளையம் சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளருக்கு ஏற்கெனவே அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில், அழைப்பாணை அனுப்பியும் ஆஜராகாததால் காவல் ஆய்வாளருக்கு பிடியாணை பிறப்பித்து நீதிபதி ஸ்ரீகுமாா் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT