குண்டடம் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 போ் கைது
தாராபுரம் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தாராபுரம் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தாராபுரத்தை அடுத்த குண்டடம் அருகே உள்ள கருப்பட்டிபாளையத்தில் சிலா் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து குண்டடம் காவல் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.
இதில், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அதே பகுதியைச் சோ்ந்த ஈஸ்வரன் (42), கனகசபாபதி (41), தங்கராஜ் (31), சாமிநாதன் (35), கோபால் (45), ஜெகநாதன் (41), ஜெகதீஸ்வரன் (39) ஆகிய 7 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த ரூ.1,200 ஐ பறிமுதல் செய்தனா்.