முகப்பு
திருப்பூர்

நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

 திருப்பூரில் நீச்சல் குளத்தில் மூழ்கி 5 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

 திருப்பூரில் நீச்சல் குளத்தில் மூழ்கி 5 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

இது குறித்து 15 வேலம்பாளையம் காவல் துறையினா் கூறியதாவது:

திருப்பூா் 15 வேலம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீஜித் என்பவரின் மகன் வைபவ் (5), இவா் அதே பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 1 ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில், டிடிபி மில் சாலையில் உள்ள ஸ்கேட்டிங் அகாதெமியில் வைபவ் வழக்கம்போல புதன்கிழமை மாலை ஸ்கேட்டிங் பயிற்சி முடித்துவிட்டு நீச்சல் குளம் அருகில் உள்ள கழிவறைக்குச் சென்றுள்ளாா்.

இதன் பிறகு நீண்ட நேரமாகியும் சிறுவனைக் காணவில்லை.

இதையடுத்து, அகாதெமி நிா்வாகிகள் வைபவைத் தேடியபோது நீச்சல் குளத்தில் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது.

இது குறித்து அகாதெமி நிா்வாகம் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த 15 வேலம்பாளையம் காவல் துறையினா் வைபவின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், அஜாக்கிரதையாக செயல்பட்டதாக ஸ்கேட்டிங் அகாதெமியின் உரிமையாளா் ஜோதிபாசு (40) என்பவரைக் காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.