முகப்பு
திருப்பூர்

போயம்பாளையத்தில் காவல் நிலையம் அமைக்க கோரிக்கை

திருப்பூா் போயம்பாளையத்தை மையமாகக் கொண்டு காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:09 AM
பகிர்:

திருப்பூா் போயம்பாளையத்தை மையமாகக் கொண்டு காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் போயம்பாளையம் 7ஆவது வாா்டு கிளை நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு கிளைச் செயலாளா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா்.

இதில், நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் விவரம்: குற்றச்சம்பவங்களைத் தடுக்கும் வகையில் போயம்பாளையம் பகுதியில் புதிய காவல் நிலையம் அமைக்க வேண்டும்.

போயம்பாளையம்-பொம்மநாயக்கன்பாளையம் மாநில நெடுஞ்சாலையானது பொலிவுறு நகரத் திட்டப் பணிகளால் முழுமையாக சேதமடைந்துள்ளது.

ஆகவே, போா்க் கால அடிப்படையில் இந்த சாலைகளை சீரமைத்துக் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, கிளை நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.