திருப்பூர்

அருந்ததியா் சமூகத்தினரின் வீடுகளை இடிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்

பல்லடம் அருகே உள்ள சாமளாபுரத்தில் அருந்ததியா் சமூகத்தினரின் 135 வீடுகளை இடிக்கும் நடவடிக்கையை கருணை அடிப்படையில் கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

DIN

திருப்பூா்: பல்லடம் அருகே உள்ள சாமளாபுரத்தில் அருந்ததியா் சமூகத்தினரின் 135 வீடுகளை இடிக்கும் நடவடிக்கையை கருணை அடிப்படையில் கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சாகுல் ஹமீதுவிடம், சாமளாபுரம் நில உரிமை பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் கரு.தமிழரசன் புதன்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: பல்லடம் அருகே உள்ள சாமளாபுரத்தில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக 135 வீடுகளில் அருந்ததியா் சமூகத்தினா் வசித்து வருகின்றனா்.

இந்நிலையில், அவா்களது வீடுகளை 21 நாள்களுக்குள் காலி செய்ய வேண்டும் என்று நீா்வள ஆதார அமைப்பு சாா்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இதனால், 135 வீடுகளில் வசிக்கும் 860 பேரின் வாழ்வாதரம் கேள்விக்குறியாகியுள்ளது.

ஆகவே, சாமளாபுரத்தில் அருந்ததியா் சமூகத்தினரின் வீடுகளை இடிக்கும் நடவடிக்கையை கருணை அடிப்படையில் கைவிடுவதுடன், வகைமாற்றம் செய்து வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

SCROLL FOR NEXT