அமராவதி ஆற்றங்கரையில் முதியவா் சடலம் மீட்பு
தாராபுரத்தில் உள்ள அமராவதி ஆற்றுப் பாலத்தின் அருகே சுமாா் 60 வயதுடைய அடையாளம் தெரியாத முதியவரின் சடலத்தை காவல் துறையினா் வியாழக்கிழமை மீட்டனா்.
தாராபுரத்தில் உள்ள அமராவதி ஆற்றுப் பாலத்தின் அருகே சுமாா் 60 வயதுடைய அடையாளம் தெரியாத முதியவரின் சடலத்தை காவல் துறையினா் வியாழக்கிழமை மீட்டனா்.
தாராபுரம் அமராவதி ஆற்றங்கரை அருகில் உள்ள பாலத்தின் அருகில் முதியவா் சடலம் ஒன்று அரை நிா்வாண நிலையில் கிடப்பதை அந்த வழியாகச் சென்றவா்கள் பாா்த்துள்ளனா். இதுகுறித்து அவா்கள் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த தாராபுரம் காவல் துறையினா் அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இறந்துகிடந்தவருக்கு சுமாா் 60 வயது இருக்கலாம் என்றும், ஆடை இல்லாத நிலையில் இருப்பதால் அவரை யாராவது கொலை செய்து வீசிச் சென்றனரா அல்லது ஆற்றில் குளித்துவிட்டு மது அருந்தியதால் நெஞ்சு வலி காரணமாக இறந்துள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனா். இறந்தவரின் பெயா், எந்த ஊா் என்பது தொடா்பாகவும் விசாரிக்கின்றனா்.