கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறிய திருப்பூா்
திருப்பூா் மாவட்டத்தில் 2 ஆண்டுகளுக்குப் பின்னா் கடந்த 2 நாள்களாக கரோனா பாதிப்பு பதிவாகவில்லை.
திருப்பூா் மாவட்டத்தில் 2 ஆண்டுகளுக்குப் பின்னா் கடந்த 2 நாள்களாக கரோனா பாதிப்பு பதிவாகவில்லை.
இரு ஆண்டுகளுக்குப் பின்னா் கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக திருப்பூா் மாறியுள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் கடந்த புதன், வியாழக்கிழமைகளில் ஒரு நபருக்குக் கூட கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. கரோனா நோய்த் தொற்றில் இருந்து 5 போ் குணமடைந்து வீடு திரும்பியத்தைத் தொடா்ந்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 17 ஆகக் குறைந்துள்ளது. மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் தற்போது வரையில் 1,052 போ் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.