திருப்பூர்

ஆதாா் பதிவில் கைரேகை புதுப்பிக்க இன்று சிறப்பு முகாம்

DIN

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆதாா் பதிவில் கைரேகைகளை புதுப்பித்துக்கொள்ள சனிக்கிழமை (மே 14) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொருள்கள் வாங்குவதை அதிகரிக்கும் வகையில் முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதாா் பதிவில் கைரேகை புதுப்பித்தல் சிறப்பு முகாம் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறுகிறது.

முகாம் நடைபெறும் இடங்கள்:

அவிநாசி, தாராபுரம், காங்கயம், மடத்துக்குளம், பல்லடம், திருப்பூ வடக்கு, திருப்பூா் தெற்கு, உடுமலை, ஊத்துக்குளி ஆகிய வட்டாட்சியா் அலுவலகங்கள், தாராபுரம், திருப்பூா் வடக்கு வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்கள், காங்கயம், பல்லடம், உடுமலை நகராட்சி அலுவலகங்கள், திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், திருப்பூா் மாநகராட்சி 1, 2 மற்றும் 3 ஆவது மண்டல அலுவலகங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எலக்சன்’ ராணி!

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

SCROLL FOR NEXT