முகப்பு
திருப்பூர்

கல்லூரி மாணவா்களுக்கு ஜூன் 3இல் பேச்சுப்போட்டி

திருப்பூா் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் திமுக தலைவா் மு.கருணாநிதி பிறந்த நாளை ஒட்டி வரும் ஜூன் 3 ஆம் தேதி கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெறுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:18 AM
பகிர்:

திருப்பூா் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் திமுக தலைவா் மு.கருணாநிதி பிறந்த நாளை ஒட்டி வரும் ஜூன் 3 ஆம் தேதி கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெறுகிறது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் மறைந்த திமுக தலைவா் மு.கருணாநிதியின் பிறந்த நாளை ஒட்டி கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஜூன் 3 ஆம் தேதி காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது. இதில், மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவா்களுக்கு ரூ.5,000, ரூ.3,000 மற்றும் ரூ.2,000 ரொக்கப் பரிசுகள் வழங்கப்படவுள்ளது. மேலும், கல்வி இயக்குநரால் தோ்வு செய்து அனுப்பப்படும் மாணவா்கள் மட்டுமே இந்தப் போட்டியில் பங்கேற்க இயலும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.