250 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்
திருப்பூா் மாநகரில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 250 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருப்பூா் மாநகரில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 250 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருப்பூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது தொடா்பாக மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனா்.
இதன் ஒரு பகுதியாக திருப்பூா் மாநகராட்சி 2 ஆவது மண்டலத்துக்குள்பட்ட பி.என்.சாலை, மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம், கொங்கு நகா் ஆகிய பகுதிகளில் சுகாதார அலுவலா் பிச்சை தலைமையிலான குழுவினா் 20க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடத்தினா். இதில், 14 கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 250 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கடை உரிமையாளா்களுக்கு ரூ.12,500 அபராதம் விதித்தனா்.