திருப்பூர்

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

DIN

திருப்பூரில் 17 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.

இதுகுறித்து திருப்பூா் தெற்கு காவல் துறையினா் கூறியதாவது:

திருப்பூா் வெங்கடேஷ்வரா நகரைச் சோ்ந்தவா் ரியாஸ் அகமது (23). இவா் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் கட்டிங் மாஸ்டராக பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், வீட்டின் அருகே வசித்து வந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பழகி வந்துள்ளாா். இதனிடையே, கடந்த அக்டோபா் 30ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி பின்னா் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து அவரது பெற்றோா் அளித்த புகாரின்பேரில் திருப்பூா் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில் சிறுமியை மேட்டுப்பாளையத்துக்கு கடத்திச் சென்று ரியாஸ் அகமது பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா் ரியாஸ் அகமதுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT