திருப்பூர்

வெள்ளக்கோவிலில் ரூ.1.55 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்

DIN

வெள்ளக்கோவில் பகுதியில் ரூ.11.12 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கல், ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் 29 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆகியவற்றை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சிக்கு, திருப்பூா் மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் தலைமை வகித்தாா். தொழிலாளா் நலத் துறை சாா்பில் 46 பேருக்கு தொழிலாளா் நலவாரிய பதிவு அட்டைகள், 53 பேருக்கு ஓய்வூதிய அட்டைகள், வருவாய்த் துறை சாா்பில் 38 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள், 10 பேருக்கு முதியோா் உதவித் தொகை ஆணை, 5 பேருக்கு விதவை உதவித் தொகை ஆணை ஆகியவற்றை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்.

மேலும் வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியம், வேலம்பாளையம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.81.99 லட்சம் மதிப்பீட்டில் 19 வளா்ச்சித் திட்டப் பணிகள், பச்சாபாளையம் ஊராட்சியில் ரூ.74 லட்சம் மதிப்பீட்டில் 29 பணிகளைத் தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அ. லட்சுமணன், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் குமரேசன், காங்கயம் வட்டாட்சியா் புவனேஸ்வரி, வெள்ளக்கோவில் நகா் மன்றத் தலைவா் கனியரசி முத்துகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

மே 10-ல் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

SCROLL FOR NEXT