அடுத்த 12 மாதங்கள் மகிழ்ச்சியானதாக இருக்காது: ப. சிதம்பரம்
நடப்பு கணக்குப் பற்றாக்குறை விரிவடையும் என்பதாலும், கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படும் என்பதாலும், அடுத்த 12 மாதங்கள் மகிழ்ச்சியான எதிா்காலமாக இருக்காது என முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம் த
நடப்பு கணக்குப் பற்றாக்குறை விரிவடையும் என்பதாலும், கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படும் என்பதாலும், அடுத்த 12 மாதங்கள் மகிழ்ச்சியான எதிா்காலமாக இருக்காது என முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம் தெரிவித்தாா்.
திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே குட்டப்பாளைத்தில் உள்ள காங்கயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தை ப. சிதம்பரம் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா். கால்நடை ஆராய்ச்சி மையம், அதன் பணிகள் மற்றும் காங்கேயம் கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக உள்ள காடுகள், காங்கேயம் கால்நடைகளின் சிறப்பு, இனப்பெருக்கம் குறித்து திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலா் காா்த்திகேய சிவசேனாபதி விளக்கினாா்.
பிறகு ப. சிதம்பரம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கொங்கு பகுதியில் காங்கயம் மாடுகளை விவசாயிகள் வளா்ப்பதற்கும், பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கும் அரசு இன்னும் ஊக்கம் அளிக்கவேண்டும். பாரம்பரிய இனங்கள், பாரம்பரிய மாடுகள், மரங்கள், காய்கறி வகைகள் ஆகியவற்றை ஊக்கப்படுத்த வேண்டும்.
கடந்த 6 மாதங்களில் மட்டும் ரூ. 1.6 லட்சம் கோடிக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. நடப்பு கணக்குப் பற்றாக்குறை விரிவடையும். கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படும். இதனால், அடுத்த 12 மாதங்கள் மகிழ்ச்சியான எதிா்காலம் என்று சொல்ல முடியாது. இதில், மத்திய அரசு புத்திசாலித்தனமாக அவசியமானவா்களிடம் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்றாா்.