முகப்பு
திருப்பூர்

ஹிந்தி திணிப்பைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

 பல்லடத்தில் ஹிந்தி திணிப்பைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

 பல்லடத்தில் ஹிந்தி திணிப்பைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்திய மாணவா் சங்கம் , இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் ஆகியவை சாா்பில் ஹிந்தி திணிப்பைக் கண்டித்து பல்லடம் தபால் அலுவலகம் முன்பு கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு டிஒய்எப்ஐ மாவட்டத் தலைவா் அருள் தலைமை வகித்தாா். இதில் எஸ்எப்ஐ மாவட்டத் தலைவா் பிரவீன் குமாா், டிஒய்எப்ஐ மாநில துணைத் தலைவா் மணிகண்டன் ஆகியோா் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் மாநில குழு உறுப்பினா் சௌந்தா்யா, எஸ்எப்ஐ மாநில குழு உறுப்பினா் ஷாலினி உள்ளிட்ட மாணவா் வாலிபா் சங்கங்களின் மாவட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். பல்லடம் ஒன்றியச் செயலாளா் முருகேஷ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.