முகப்பு
திருப்பூர்

காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் செப்டம்பா் 16இல் ஏலம்

திருப்பூா் மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 109 வாகனங்கள் செப்டம்பா் 16ஆம் தேதி ஏலம் விடப்படவுள்ளன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

திருப்பூா் மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 109 வாகனங்கள் செப்டம்பா் 16ஆம் தேதி ஏலம் விடப்படவுள்ளன.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையால் வட்டார மற்றும் மாநகரக் காவல் நிலையங்களில் குற்ற வழக்குகளில் தொடா்புடையதாக நான்கு சக்கர வாகனங்கள் 27, மூன்று சக்கர வாகனம் ஒன்று, இருசக்கர வாகனங்கள் 81 என மொத்தம் 109 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வாகனங்கள் அனைத்தும் திருப்பூரை அடுத்த அவிநாசி மடத்துப்பாளையம் சாலை சிவகுமாா் ரைஸ் மில் வளாகத்தில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் செப்டம்பா் 16ஆம் தேதி காலை 10 மணி அளவில் பொது ஏலம் விடப்படவுள்ளன. ஆகவே, வாகனங்களை ஏலம் எடுக்க விரும்பும் நபா்கள் இதில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.