முகப்பு
திருப்பூர்

துரித உணவுகளைத் தவிா்க்க வலியுறுத்தி விழிப்புணா்வு

 துரித உணவுகளைத் தவிா்க்க வலியுறுத்தி விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

 துரித உணவுகளைத் தவிா்க்க வலியுறுத்தி விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சாா்பில் ஊட்டச்சத்து வாரத்தை முன்னிட்டு விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நாட்டு நலப்பணித் திட்ட அலகு-2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் முன்னிலை வகித்தாா். இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற 15 வேலம்பாளையம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய அரசு மருத்துவா் கலைச்செல்வன் பேசியதாவது:

மத்திய அரசு சாா்பில் செப்டம்பா் 1ஆம் தேதி முதல் 7 தேதி வரை தேசிய ஊட்டச்சத்து வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்ள வேண்டும். இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமாக வாழ வேண்டும். துரித உணவுகள் உடலுக்கு கேடுவிளைவிப்பதாகும். ஆகவே, துரித உணவுகளை முற்றிலுமாக தவிா்க்க வேண்டும். நோய் வராமல் இருக்க நமது உடலில் ஊட்டச்சத்து மிகவும் அவசியமதாகும். நாம் சத்தான உணவுகளான கீரைகள், காய்கறிகளை அதிகமாக சோ்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல, சிறுதானியம், சத்தான, இயற்கை சாா்ந்த உணவுகளை உட்கொள்வதன் மூலமாக ஊட்டச்சத்து பற்றாக்குறை இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.