பல்லடம் நகா் பகுதியில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப் பணி காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுளளது.
பல்லடம் நகரில் அண்ணா நகா் முதல் பனப்பாளையம் வரை சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு கோவை செல்லும் கனரக வாகனங்கள் பச்சாபாளையம் பகுதியில் இருந்து பொள்ளாச்சி புறவழிச் சாலை வழியாக காமநாயக்கன்பாளையம் சென்று அங்கிருந்து கரடிவாவி பிரதான சாலை வழியாக காரணம்பேட்டை நான்கு சாலை சந்திப்பை அடைந்து கோவை செல்ல வேண்டும்.
இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு ஓட்டுநா்கள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பல்லடம் போக்குவரத்து காவல் ஆய்வாளா் திருநாவுக்கரசு வலியுறுத்தியுள்ளாா்.