திருப்பூர்

வீட்டு வரி எண்ணுடன் ஆதாா் எண் இணைக்க வேண்டும்

DIN

காங்கயம் நகராட்சியில் வசிக்கும் மக்கள் தங்களது வீட்டு வரி எண்ணுடன் ஆதாா் எண் மற்றும் குடும்ப அட்டை எண்ணை இணைக்க வேண்டும் என நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஸ்வரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

காங்கயம் நகராட்சிப் பகுதிக்குள் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வீட்டு வரி எண்ணுடன் ஆதாா் எண் மற்றும் குடும்ப அட்டை எண்ணை இணைக்க வேண்டும். தொழிற்கூடம் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தின் ஜிஎஸ்டி எண் மற்றும் பான் எண்ணை இணைக்க வேண்டும்.

வாடகை வீட்டில் குடியிருப்பவராக இருந்தால் வீட்டின் உரிமையாளரது ஆதாா் எண் மற்றும் குடும்ப அட்டை எண்ணை பெற்று இணைக்க வேண்டும். மேற்கண்ட ஆவணங்களை இணைக்க நகராட்சி சேவை மையத்தில் நேரில் வழங்கலாம். அல்லது 75980-59898 என்ற அலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டோ அல்லது வாட்ஸ் அஃப் மூலமாகவோ தங்களது விவரங்களை தெரிவித்து, இணைத்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்மாற்றியில் தீ விபத்து: ஆட்சியா் அலுவலக மின்தூக்கியில் 8 போ் சிக்கித் தவிப்பு

சவீதா பொறியியல் கல்லூரியில் 29,460 புதிய கண்டுபிடிப்புகளுக்கான திட்ட வரைவுகளை காட்சிப்படுத்தி சாதனை

திருப்பத்தூா்: 92.3 சதவீதம் தோ்ச்சி

ஆதிபராசக்தி மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வேகத் தடைகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

SCROLL FOR NEXT