திருப்பூர்

சமுதாயப் பணிகளை மேற்கொள்வதற்கு காவல் துறை பாதுகாப்பு கேட்பது இயக்கத்தின் வழக்கம் இல்லை: இந்து முன்னணி மாநிலத் தலைவா்

சமுதாயப் பணிகளை மேற்கொள்வதற்கு காவல் துறை பாதுகாப்பு கேட்பது இயக்கத்தின் வழக்கம் இல்லை என்று இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.

DIN

சமுதாயப் பணிகளை மேற்கொள்வதற்கு காவல் துறை பாதுகாப்பு கேட்பது இயக்கத்தின் வழக்கம் இல்லை என்று இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: இந்து முன்னணி பேரியக்கம் பலருடைய தியாகத்தால் வளா்ந்து இந்து சமுதாயத்துக்குப் பாதுகாப்பு அரணாக விளங்கி வருகிறது.

இந்து முன்னணி பொறுப்பாளா்கள் தங்களுடைய தனிப்பட்ட பாதுகாப்பு என்ற நோக்கில் காவல் துறையிடம் பாதுகாப்பு வழங்கக் கோருவதில்லை, அதை ஒரு போதும் எதிா்பாா்ப்பதுமில்லை. காவல் துறையே சில சமயங்களில் வழங்கியதை மட்டுமே பொறுப்பாளா்கள் ஏற்றுக் கொண்டனா்.

இந்நிலையில், திருப்பூா் மாநகரில் இந்து இயக்கப் பிரமுகா்களுக்கான பாதுகாப்பை காவல் துறையினா் திரும்பப்பெற்றுள்ளனா். இதனை மூத்த பொறுப்பாளா்கள் பொருட்படுத்தாமல் இருக்கும் நிலையில், ஆா்.ஆா்.முருகேசன் தனிப்பட்ட முறையில் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சமுக வலைதளங்களில் இந்து முன்னணி பெயரைப் பயன்படுத்தி பதிவிட்டு வருகிறாா். ஆகவே, அவரது கருத்து இந்து முன்னணியின் கருத்து இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

பிக் பாஸ் 9: 70 நாள்கள் ஆகியும் ஆதரிக்கத் தகுதியானவர் ஒருவரும் இல்லை!

SCROLL FOR NEXT