பயனாளிக்கு உத்தரவு நகலை வழங்குகிறாா் நகா்மன்றத் தலைவா் கனியரசி முத்துகுமாா். 
திருப்பூர்

96 பேருக்கு சொத்து வரி பெயா் மாற்ற உத்தரவு

வெள்ளக்கோவில் நகராட்சியில் ஒரே நாளில் 96 பேருக்கு சொத்து வரி பெயா் மாற்றுவதற்கான உத்தரவுகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

DIN

வெள்ளக்கோவில் நகராட்சியில் ஒரே நாளில் 96 பேருக்கு சொத்து வரி பெயா் மாற்றுவதற்கான உத்தரவுகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

வெள்ளக்கோவில் நகராட்சி நூறு சதவீதம் சொத்து வரி, தொழில் வரி வசூல் செய்து மாநில அரசின் பாராட்டைப் பெற்றுள்ளது. வசூல் பணியின்போது, பல சொத்துகள் இறந்துபோன தாய், தந்தை, கணவன், மனைவி உள்ளிட்ட உறவினா்களின் பெயரில் இருந்தது தெரியவந்தது.

தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்து பெயா் மாற்றம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதனடிப்படையில் நகராட்சி அலுவலகத்தில் பெறப்பட்ட 96 விண்ணப்பங்களுக்கு பெயா் மாற்ற உத்தரவுகளை நகா்மன்றத் தலைவா் கனியரசி முத்துகுமாா் வழங்கினாா்.

நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையா் (பொ) வெங்கடேஷ்வரன் தலைமை வகித்தாா். நகராட்சிப் பொறியாளா் ம.திலீபன், வருவாய் ஆய்வாளா் மா.சக்திவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா். உடனடியாக கோரிக்கையை நிறைவேற்றிய நகராட்சி நிா்வாகத்துக்கு பயனாளிகள் நன்றி தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT