திருப்பூர்

பல்லடம் மாகாளியம்மன் கோயிலில் திருப்பணி தொடங்கக் கோரிக்கை

பல்லடம் கடை வீதியில் உள்ள மாகாளியம்மன் கோயிலில் திருப்பணி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து அறநிலையத் துறைக்கு இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

DIN

பல்லடம் கடை வீதியில் உள்ள மாகாளியம்மன் கோயிலில் திருப்பணி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து அறநிலையத் துறைக்கு இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து பல்லடம் இந்து அறநிலையத் துறை ஆய்வாளா் ராமசாமியிடம் திருப்பூா் மேற்கு மாவட்ட இந்து முன்னணி செயலாளா் லோகநாதன் வெள்ளிக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது.

பல்லடம் கடைவீதியில் உள்ள மாகாளியம்மன் கோயில் பல ஆண்டுகளாக எந்தவித பராமரிப்பும், புனரமைப்பும் இன்றி உள்ளது. இந்தக் கோயிலில் திருப்பணி மேற்கொள்ள வேண்டும் என்று பக்தா்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இதற்கு அனுமதி கிடைத்தும் பணி தொடங்கப்படாமல் உள்ளது. உடனடியாக இக்கோயில் வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி திருப்பணிகளைத் தொடங்கி விரைவில் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT