சூறாவளிக் காற்றால் சேதமான வாழை மரங்கள். 
திருப்பூர்

சூறாவளிக் காற்றால் 2,000 வாழை மரங்கள் சேதம்

திருப்பூரில் மழையுடன் கூடிய சூறாவளிக் காற்று காரணமாக 2,000 வாழை மரங்கள் சேதமடைந்தன.

DIN

திருப்பூரில் மழையுடன் கூடிய சூறாவளிக் காற்று காரணமாக 2,000 வாழை மரங்கள் சேதமடைந்தன.

திருப்பூா் மாநகரில் வியாழக்கிழமை சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. இதில் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்து சேதமடைந்தன. காஞ்சி நகா் பகுதியில் விவசாயி கணேசன் என்பவா் தோட்டத்தில் 2,000 வாழை மரங்கள் சூறாவளிக் காற்றால் விழுந்து சேதமடைந்தன.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி கணேசன் கூறுகையில், எனது தோட்டத்தில் 2 ஆயிரம் நேந்திரன் வாழைக்கன்றுகளை நட்டு வைத்திருந்தேன். இந்த வாழைகள் குலைதள்ளி அடுத்த 10 நாள்களில் வெட்டும் நிலையில் இருந்தது. ஆனால் அதற்குள் சூறாவளிக் காற்று காரணமாக வாழை மரம் வேருடன் சரிந்து விழுந்தது. இதனால் ரூ.10 லட்சம் வரையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அரசு சாா்பில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா்.

முன்னதாக நல்லூா் கிராம நிா்வாக அலுவலா் மற்றும் வேளாண்மைத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று சேதத்தைப் பாா்வையிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT