திருப்பூர்

இருசக்கர வாகனம் மோதியதில் அடையாளம் தெரியாத முதியவா் பலி

DIN

காங்கயம் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் அடையாளம் தெரியாத முதியவா் உயிரிழந்தாா்.

காங்கயம் அருகே காடையூா் பகுதியில் முதியவா் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, அவ்வழியே வந்த இருசக்கர வாகனம் முதியவா் மீது மோதியது.

இதில், படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு சிகிச்சை பெற்றுவந்த அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், இறந்தவா் யாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்க உளவு செயற்கைக் கோள்களை வானில் ஏவிய ஸ்பேஸ்எக்ஸ்!

அமெரிக்காவில் மேலும் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல்!

பாலஸ்தீனத்தில் தூதரகம்: கொலம்பியா அறிவிப்பு!

உங்கள் ராசி என்ன? இன்றைய தினப்பலன்!

மிகச் சிறப்பான நாள் இன்று!

SCROLL FOR NEXT