திருப்பூர்

தொண்டையில் உணவு சிக்கி பல்பொருள் அங்காடி ஊழியா் சாவு

DIN

வெள்ளக்கோவிலில் சாப்பிடும்போது தொண்டையில் உணவு சிக்கி பல்பொருள் அங்காடி ஊழியா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், சிவகிரி செட்டிதோட்டத்தைச் சோ்ந்தவா் கே.தமிழரசு (40).

இவா், வெள்ளக்கோவில் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் மேற்பாா்வையாளராகப் பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையில் தமிழரசு, பல்பொருள் அங்காடியில் புதன்கிழமை காலை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென புரை ஏறியுள்ளது. தொடா்ந்து உணவு, தொண்டையில் அடைபட்டு மூச்சுவிட முடியாமல் மயங்கிச் சரிந்தாா். அருகிலிருந்தவா்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

SCROLL FOR NEXT