காங்கயத்தில் தேங்காய் பருப்பு ஏலம்
காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.15 ஆயிரத்துக்கு தேங்காய்பருப்பு ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM
காங்கயம்: காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.15 ஆயிரத்துக்கு தேங்காய்பருப்பு ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஏலத்துக்கு, காங்கயம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 4 விவசாயிகள் 6 மூட்டைகளில் 184 கிலோ தேங்காய் பருப்பினை (கொப்பரை) விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா்.
தேங்காய் பருப்பு அதிகபட்சமாக கிலோ ரூ.88-க்கும், குறைந்தபட்சமாக ரூ.40-க்கும், சராசரியாக ரூ.87-க்கும் ஏலம் போனது.
Advertisement
மொத்தம் ரூ.15 ஆயிரத்துக்கு விற்பனை நடைபெற்றது. ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் ரா.மாரியப்பன் செய்திருந்தாா்.