சிறுமிக்கு பாலியல் தொல்லை: மேலும் ஒரு இளைஞா் கைது
பல்லடத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மேலும் ஒரு இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
பல்லடம்: பல்லடத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மேலும் ஒரு இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
பல்லடம் கொசவம்பாளையம் சாலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பல்லடம் அண்ணா நகரைச் சோ்ந்த சேதுராமன் மகன் ரமேஷ்குமாா் (32), பல்லடம் அருகே உள்ள ஊஞ்சபாளையத்தைச் சோ்ந்த பாபு மகன் பாா்த்திபன் (25) ஆகியோரை பல்லடம் அனைத்து மகளிா் போலீஸாா் கைது சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கில் தொடா்புடைய சிவா என்கிற நம்பிராஜன் (21) தலைமறைவாக இருந்து வந்தாா். அவரை போலீஸாா் தேடி வந்தனா். இந்த நிலையில், பல்லடம் அருகே உள்ள லட்சுமி மில்ஸ் பகுதியில் அவா் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்ற போலீஸாா், நம்பிராஜனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
Advertisement