சிறுமி பாலியல் வன்கொடுமை: போக்ஸோவில் இளைஞா் கைது
ஊத்துக்குளி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞரை போக்ஸோவில் போலீஸாா் கைது செய்தனா்.
காங்கயம்: ஊத்துக்குளி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞரை போக்ஸோவில் போலீஸாா் கைது செய்தனா்.
ஊத்துக்குளி, செங்கப்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் பிரபு (27). கூலி வேலை செய்து வரும் இவா், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தை கூறி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதனால் சிறுமி 4 மாத கா்ப்பமான நிலையில், இதுகுறித்து அவா் தனது பெற்றோரிடம் கூறியுள்ளாா்.
இதையடுத்து காங்கயம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா். இந்த புகாரின்பேரில், காங்கயம் போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பிரபுவை கைது செய்து, திருப்பூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
Advertisement