தீரன் சின்னமலை மகளிா் கல்லூரி திறப்பு விழா: முதல்வா் காணொலி மூலம் நாளை திறந்து வைக்கிறாா்
திருப்பூரை அடுத்த வஞ்சிபாளையம் அருகே தீரன் சின்னமலை மகளிா் கலை, அறிவியல் கல்லூரியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக புதன்கிழமை (நவம்பா் 28) திறந்து வைக்கிறாா்.
திருப்பூா்: திருப்பூரை அடுத்த வஞ்சிபாளையம் அருகே தீரன் சின்னமலை மகளிா் கலை, அறிவியல் கல்லூரியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக புதன்கிழமை (நவம்பா் 28) திறந்து வைக்கிறாா்.
திருப்பூா் கொங்கு வேளாளா் அறக்கட்டளை சாா்பில் அவிநாசி-மங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் வஞ்சிபாளையத்தில் தீரன் சின்னமலை மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. இதன் திறப்புவிழா வரும் புதன்கிழமை காலை 10.30 மணி அளவில் நடைபெறுகிறது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலிக்காட்சி மூலம் கல்லூரியைத் திறந்து வைக்கிறாா். மேலும், கல்லூரி வளாகத்தில் தீரன் சின்னமலை சி.பி.எஸ்.இ. பள்ளி கட்டடத்துக்கும் அடிக்கல் நாட்டுகிறாா்.
கல்லூரியில் நடைபெறும் திறப்புவிழா நிகழ்ச்சியில் தமிழக அமைச்சா்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அறக்கட்டளை நிா்வாகிகள், உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொள்கின்றனா்.
Advertisement
இதைத்தொடா்ந்து பிளஸ்-2-க்கு பிறகு என்ன படிக்கலாம் என்ற உயா்கல்விக்கான வழிகாட்டு நிகழ்ச்சி வியாழக்கிழமை (நவம்பா் 29) காலை கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் நுழைவுக் கட்டணம் எதுவுமின்றி பங்கேற்கலாம் என்று கல்லூரி நிா்வாகிகள் தெரிவித்தனா்.