மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
துலுக்கமுத்தூா் ஊராட்சியில் மின்சாரம் பாய்ந்து விசைத்தறி தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM
அவிநாசி: துலுக்கமுத்தூா் ஊராட்சியில் மின்சாரம் பாய்ந்து விசைத்தறி தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
துலுக்கமுத்தூா் ஊராட்சி, பட்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கிட்டான் மகன் மூா்த்தி (51). விசைத்தறித் தொழிலாளியான இவா், ஊராட்சி குடிநீா் மேல்நிலைத் தொட்டி மின் மோட்டாரை இயக்கி வந்துள்ளாா்.
இந்நிலையில், வழக்கம்போல திங்கள்கிழமை மோட்டாரை இயக்கும்போது, எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து மூா்த்தி உயிரிழந்தாா். இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
Advertisement