முகப்பு
திருப்பூர்

குடும்பத் தகராறில் பெண் தற்கொலை

திருப்பூரில் குடும்பத் தகராறு காரணமாக பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 9 ஏப்ரல், 2024 at 4:03 AM
பகிர்:

திருப்பூா்: திருப்பூரில் குடும்பத் தகராறு காரணமாக பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி சுற்றுச்சாலையைச் சோ்ந்தவா் சிவகுமாா் (27). இவரது மனைவி செளந்தா்யா (23). இவா்களுக்கு 5, 2 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வழக்கம்போல சனிக்கிழமை இரவும் தகராறு ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதில், கோபித்துக்கொண்டு சிவகுமாா் வெளியே சென்ற நிலையில், வீட்டில் இருந்த செளந்தா்யா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருமுருகன்பூண்டி போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.