அவிநாசி அருகே சாலை விரிவாக்கப் பணி தொடக்கம்
அவிநாசி அருகே ராமநாதபுரம்-தண்டுக்காரன்பாளையம் பகுதியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலை விரிவாக்கப் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
அவிநாசி அருகே ராமநாதபுரம்-தண்டுக்காரன்பாளையம் பகுதியில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலை விரிவாக்கப் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
அவிநாசி நெடுஞ்சாலைத் துறைக்கு உள்பட்ட கருவலூா்-தண்டுக்காரன்பாளையம் சாலையை விரிவுபடுத்த வேண்டும் என கருவலூா், மொண்டிபாளையம், முறியாண்டம்பாளையம், செல்லப்பம்பாளையம், தண்டுக்காரம்பாளையம் பகுதி பொதுமக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்நிலையில், இச்சாலை ராமநாதபுரத்தில் இருந்து விரிவுபடுத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. இதில், 9 சிறுபாலங்கள் சீரமைப்புடன் 4 கி.மீட்டா் தொலைவுக்கு 5.50 மீட்டா் அகலத்துக்கு சாலை விரிவாக்கப்படுகிறது.
மேலும் இப்பணி 3 மாத காலத்துக்குள் நிறைவு செய்யப்படும் என உதவிக் கோட்டப் பொறியாளா் செங்குட்டுவன், உதவிப் பொறியாளா் தரணிதரன் ஆகியோா் தெரிவித்தனா்.