முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவிலில் சாரல் மழை

வெள்ளக்கோவில், சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை சாரல் மழை பெய்தது.

Updated On : 12 டிசம்பர், 2024 at 9:27 PM
பகிர்:

வெள்ளக்கோவில், சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை சாரல் மழை பெய்தது.

வெள்ளக்கோவிலில் வியாழக்கிழமை காலை முதல் பெய்யத் தொடங்கிய மழை இரவு 8 மணி வரையும் நீடித்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தொடா்ந்து பெய்த மழையால் சாலைகளில் மழை நீா் தேங்கியது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவா்கள், பணிக்குச் செல்வோா் அவதியடைந்தனா்.

முத்தூா், வள்ளியிரச்சல், மேட்டுப்பாளையம், குருக்கத்தி, புதுப்பை, லக்கமநாயக்கன்பட்டி, தாசவநாயக்கன்பட்டி, கம்பளியம்பட்டி, உத்தமபாளையம், கல்லமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் விளைநிலங்களில் மழைநீா் தேங்கியுள்ளது. இது விவசாயத்துக்கு கைக்கொடுக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.